Showing posts with label சிவகுமார். Show all posts
Showing posts with label சிவகுமார். Show all posts

திரும்பிபார்கிறேன் : நான் பாடும் பாடல் - விமர்சனம்

விடியற்காலை, திடீரெண்டு முழிப்பு வர, மேற்கொண்டு என்னால் படுக்க தூங்கமுடியவில்லை. அப்போது தான் நாபகம் வந்தது கடந்த சனி அன்று வாங்கி வந்த DVD. அது, ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் பாடும் பாடல். தூக்கம் வரும்வரை இந்த படத்தை பார்கலாமுனு பார்க்க ஆரமிச்சேன். படம் முடியும் வரை அதனை நிறுத்த மனம் வரவில்லை.

விதவைத் திருமணத்துக்கு ஆதரவான கருத்து வேகமாகப் பரவத் தொடங்கிய காலத்தில், அதற்கு எதிராக இப்படி ஒரு படமா என விமர்சனம் கிளம்பினாலும், படம் பெரிய வெற்றியைப் பெற்றது. காரணம், இளையராஜாவின் அற்புதமான இசை மற்றும் கவுண்டரின் அதிர்வேட்டு நகைச்சுவை.

படத்தோட கதை என்னனா ...
கன்னியாகுமாரி. பத்து குடித்தனம் இருக்கும் ஒரு காம்பவுண்டு. அங்கே நடக்கும் ஒரு கதை தான் இந்த படம். அம்பிகா, பாண்டியன், கவுண்டமணி இன்னும் சிலர் அந்த பத்து குடும்பத்தில் அடங்குவர்.

மூன்று நாளில் கணவனை இழந்த பெண் அம்பிகா. இவள் அவளது கணவர் குடுபத்துடன் வசிப்பவர், ஆசிரியர் பணியில் இருந்தவாறு. புத்தகம் இவளது நண்பர். அதுவும் அழுத்திய புக் என்றால் 'சால இஸ்டம்' படிப்பதற்கு. இவளது கணவர் தங்கையை காதலிப்பவர் பாண்டியன். இவனது உறவுகார மாமா சிவக்குமார், ஒரு கதை ஆசிரியர். தனது அடுத்த கதையை எழுத தன்னை தாயார் செய்துகொள்ள அங்கே வருகிறார். வரும்போதே அம்பிகாவால் அடி உதை வாங்கி - இவர் மீது அனுதாபம் வருகிறது அம்பிகாவுக்கு.

இந்நிலையில், இவளை காதலிக்கும் இரண்டு ஜீவன்கள்: ஒருவர் பணக்காரர், சரத்பாபு. மற்றொருவர் பஸ் கண்டக்டர் சுரேஷ். இருவரும் மாறி மாறி அன்பை வெளிபடுத்த இவள் அவர்களை ஒதுக்க - ஒரு நாள் பஸ்சில் "பாடவா உன் பாடலை என் வாழ்விலோ ஓர் பொன்வீணை ..." ஒலிக்க இவளது முகம் வியத்து பஸ்ஸை விட்டு இரங்கி நடந்து வருகிறாள் வீட்டிருக்கு.
வை கறையில் வைகை கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்....
காய்சல். படுக்கையில் அம்பிகா. வெளியே, எழுத்தாளர் சிவக்குமார் வானொலில் நேயர் பாடலை கேட்டுகொண்டிருக்கும் போது, மீண்டும் ஒலிக்கிறது அதே பாடல்."பாடவா உன் பாடலை என் வாழ்விலோ ஓர் பொன்வீணை ...". மெல்ல வெளியே வந்து முடியாமல் பாடலை நிறுத்துகிறாள். புரியாமல் நிற்கிறார் சிவகுமார்.
மறுநாள், மாலை நேரம்,
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என் வாழ்விலோ ஓர் பொன்வீணை....
அதே பாடலை அம்பிகா - தனிமையான இடத்தில் பாடிகொண்டிருபதை சிவகுமார் பார்த்துவிட - கவுண்டமானியின் மனைவியிடம் விசாரிக்கையில்.... ஒரு பிளாஷ்பேக்.
*****
சென்னை. டாக்டர் மோகனை ஒரு கல்யாண நிகழ்ச்சியில் சந்திக்கிறார், அம்பிகா. கண்டதும் காதல் மோகனுக்கு. ஒரு பாடல் வேற பாடிவிடுகிறார் அந்த கல்யாண மேடையில்...
தேவன் கோவில் தீபம் ஓன்று
ராகம் பாடும் நேரம் இன்று.......
பிறகு இருவரும் சில இடங்களில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, மனம் இடம் மாற - பெரியவர்கள் முநிலையில் - திருமணம் நடக்கிறது.
மூன்றாவது நாள், இவளுக்கு ஒரு படத்தில் பாட வாய்ப்பு கிடைக்க, அம்பிகாவும் மோகனும் ரெகார்டிங் தியேடர் செல்லும் முன்பு ஒரு அழைப்பு மணி(போன்). நளினி தனது கணவருக்கு ஆபரேஷன் செய்ய வருமாறு மோகனை அழைக்க, ஒருவழியாக மருத்துவமனை வருகிறார். ஆபரேஷன் முடித்து காரில் கிளம்பி வரும்போது, அங்கே...ரெகார்டிங் தியேடர் -ல்...
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என் வாழ்விலோ ஓர் பொன்வீணை....
பாடல் முடிவில்... விபத்து.
******
அம்பிகாவுக்கு, தன் கைப்பட ஒரு கடிதம் எழுதுகிறார் கதை ஆசிரியர் சிவக்குமார். அவளை ஒரு கோவிலில் சந்திப்பதாக சொல்லி. இவளும் செல்கிறாள்..
"பாடும் வானம்பாடி ஹா... பாடும் வானம்பாடி
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ..."
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, சிவகுமார் தான் இவள் நேசிக்கும் எழுத்தாளர் என்று. இவள் எழுதிய கடிதம் ஓன்று அம்பிகா குடும்பத்தில் கிடைக்க பெற, இவள் மீது சந்தேகம் வர - ஒரு கட்டத்தில் சிவகுமார் தான் CRS என தெரிந்ததும் - சிவகுமாருக்கு அம்பிகாவை மறுமணம் தயாராகிறார். இந்நிலையில், பாண்டியனின் காதலும் வளர்கிறது...
"மட்சானே வட்சுகடி முந்தானை முடிசுலதான்
உன்மேலே ஆசைவட்சேன் ....."
அம்பிகாவின் மாற்றத்தை உணர்ந்த மாமனார் - மாமியாரும் சேர்ந்து சிவகுமாருக்கு அம்பிகாவை திருமணம் முடிவெடுக்கிறார்கள்.
"சீர் கொண்டு வா வெண்மேகமே
இது இனிய வசந்த காலம் ...."

பிறகு என்ன நடந்தது...?
அம்பிகா - சிவகுமார் திருமணம் நடந்ததா ?
சுரேஷ், சரத்து பாபுவின் நிலை என்ன?
பாண்டியன் காதல் என்ன ஆச்சு?
... மீதியை வெள்ளித்திரையில் காண்க அல்லது நாலா DVD வாங்கி பாருங்க.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...
  • விதவை திருமணம் பற்றி மிக அழகாக பதிவு செய்த டைரக்டர் சுந்தரராஜனை மனதார பாராட்டலாம்.
  • தெளிவான திரைக்கதையும் கதாபாத்திர படைப்புகளும்.
  • அருமையான எழு பாடல்கள் + மிரட்டும் பின்னணி இசை சேர்ப்பும். இளைய ராஜா... ராஜா தான் பின்னணியில். அதுவும் கடைசி அந்து நிமிஷம் ... இசையால் பல உணர்வுகளை வெளிகொனர்வார் பாருங்க... அட அட... சபாஸ் சார்.
  • நட்சத்திர பட்டாளமே இதன் ஒரு பெரிய + பாயிண்ட். ஒவொருவரும் சிறப்பாக தங்கள் கடிப்பை காட்டியிருபத் கூடுதல் சிறப்பு.
  • கவுண்டமையின் டைமிங் காமெடி. ஆஹா.
பாடும் வானம் பாடி - இன்னும் ஒலித்துகொண்டே இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top