Showing posts with label இட்லி. Show all posts
Showing posts with label இட்லி. Show all posts

புசு புசு கீரை இட்லி

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியில் பல விதமான வகைகள் உண்டு.

அவற்றில் சில: செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி & குஷ்பு இட்லி. இந்த வரிசையில் இப்போது கிராமத்து இட்லி அதாவது கீரை இட்லி.

ஆரோக்கியமான சுவையான கீரை இட்லி செய்வது எப்படி? இதோ உங்களுக்கான செய்முறை...


தேவையானப் பொருள்கள்:
இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
  • இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள்.

  • கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

மல்லிகைப்பூ இட்லி

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

எப்படீனு கேட்கிறீங்களா...!?
புழுங்கலரிசி - 2 கப்
முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

இப்படி தயாரித்த மாவின் இட்லி சுட்டு சாப்பிட்டு பாருங்க... அப்புறம் தெரியும் உங்கள் கை பக்குவம் என்னவென்று!

Tips :-
இட்லி, தோசைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும் போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் கமகமவென்று மணமாக இருக்கும்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top