Showing posts with label கிராமத்து விருந்து. Show all posts
Showing posts with label கிராமத்து விருந்து. Show all posts

ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்

பிரைடு ரைஸ் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

நண்பர் கீரை பிரைடு ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.

ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.


தேவையானப் பொருட்கள்:-

  • பாஸ்மதி அரிசி - 250 கிராம்
  • முளைக்கீரை - 1 கட்டு

  • பட்டை - ஒரு டீஸ்பூன்
  • கிராம்பு - ஒரு டீஸ்பூன்
  • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்

  • கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

  • நெய் - 50 கிராம்
  • கடுகு & உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - 2
  • வரமிளகாய் - 2

  • பூண்டு - 5
  • துவரம்பருப்பு - ஒரு கப்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

  • முளைக்கீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

  • பாஸ்மதி அரிசி 200 கிராம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

  • குக்கரில் 50 கிராம் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

  • பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடிகள் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும்.

  • வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
Source : http://www.dinakaran.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !

தமிழர்களின் அற்புதமான உணவு இட்லி. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க வேண்டாம். இட்லியை கொண்டு செய்யப்படும் ஒரு உணவு தான் இட்லி மஞ்சூரியன். வாங்க சுடச்சுட இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

  • இட்லி - 6
  • மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்

  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய் - 5
  • பூண்டு - 5 பல்
  • முந்திரி - 10

  • டொமேட்டொசாஸ் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:-

  • இட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.

  • ஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.

  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.

  • டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

  • சுடச்சுட இட்லி மஞ்சூரியன் தயார்.

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.
இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.
Thanks : Image from en-iniyaillam.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



புசு புசு கீரை இட்லி

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியில் பல விதமான வகைகள் உண்டு.

அவற்றில் சில: செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி & குஷ்பு இட்லி. இந்த வரிசையில் இப்போது கிராமத்து இட்லி அதாவது கீரை இட்லி.

ஆரோக்கியமான சுவையான கீரை இட்லி செய்வது எப்படி? இதோ உங்களுக்கான செய்முறை...


தேவையானப் பொருள்கள்:
இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
  • இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள்.

  • கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

மல்லிகைப்பூ இட்லி

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

எப்படீனு கேட்கிறீங்களா...!?
புழுங்கலரிசி - 2 கப்
முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

இப்படி தயாரித்த மாவின் இட்லி சுட்டு சாப்பிட்டு பாருங்க... அப்புறம் தெரியும் உங்கள் கை பக்குவம் என்னவென்று!

Tips :-
இட்லி, தோசைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும் போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் கமகமவென்று மணமாக இருக்கும்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top