Showing posts with label விஸ்வரூபம். Show all posts
Showing posts with label விஸ்வரூபம். Show all posts

கமலின் நான்கு புதிய படங்கள் - குஷியில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு புதிய ரீமேக் படங்களில் நடிக்கிறார்.

1. விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.

சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. தயாரிப்புக்கு பிந்தைய வேலைகளில் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் எந்த நேரமும் படம் வெளியாகலாம்.

உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

2. உத்தம வில்லன்

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தில் முதன்முறையாக கமல் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வருகிறார். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்திருக்கின்றனர். கூடவே இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

3. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்

மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். தமிழில் திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மோகன்லால் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் நடிகை மீனா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிகை கவுதமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளம்வரவுள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தையும் இந்த ஆண்டே வெளியிட்டுவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.

4. 'மனம்' தமிழ் ரீமேக்

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அப்படத்தை பார்த்து ரசித்த கமல், நாகேஸ்வரராவின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த அந்த படத்தை பார்த்து முடித்ததும், தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் கமல்.

நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் கமல் நடிக்க, நாகார்ஜூனா வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம் மற்றும் மன்மதன் அம்பு படங்களில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், நாகசைதன்யா வேடத்துக்கு அப்படம் தொடங்கும் நேரத்தில் இன்னொரு இளவட்ட நடிகரிடமும் கால்சீட் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இரண்டு மாத இடைவெளியில் அடுத்து அடுத்து கமல் படங்கள் வெளிவருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & EniyaTamil



IMDBயில் சாதனை படைத்தது விஸ்வரூபம் !!!

சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான IMDBயில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளது.


கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான் என்பது அனைவரும் அறிந்த விடயமாகிவிட்டது.
தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இணையத்திலும் விஸ்வரூபம் புதிய சாதனை செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.

ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


3-ஆம் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்
விஸ்வரூபம் 5-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.10 கோடிகள்
விஸ்வரூபம் 6-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.65 கோடிகள்
விஸ்வரூபம் 7-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.28 கோடிகள்
விஸ்வரூபம் 8-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.05 கோடிகள்
விஸ்வரூபம் 9-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.35 கோடிகள்
விஸ்வரூபம் 10-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.70 கோடிகள்
விஸ்வரூபம் 11-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.10 கோடிகள்
விஸ்வரூபம் 12-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.23 கோடிகள்
விஸ்வரூபம் 13-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 5.90 கோடிகள்
விஸ்வரூபம் 14-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.36 கோடிகள்
விஸ்வரூபம் 15-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.15 கோடிகள்
விஸ்வரூபம் 16-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.28 கோடிகள்
விஸ்வரூபம் 17-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.02 கோடிகள்

17-ஆம் நாள் வசூல் 134.58 கோடிகள்.

சமீபத்திய எந்த தமிழ்ப் படமும் இங்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் படம் நல்ல வரவேற்ப்பும் வசூலும் ஆகிறது என்கிற தகவல் கமலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தில் திரையிடப்பட்டு நான்கு நாட்கள் கடந்தும் பல்வேறு தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளன. ரசிகர்களின் கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளதால் வடமாநில ரசிகர்கள் ஆவலுடன் வந்து ‘விஸ்வரூப’த்தை கண்டுகளிக்கிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்துள்ளது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்

விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தயாராகிறது. இப்படத்துக்கு ‘மூ’ என தலைப்பு வைத்துள்ளனர். கமலஹாசனே இயக்கி நடிக்கிறார். இதில் கமல் மூன்று வேடங்களில் வருகிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & dinakaran news paper



எதிர்பார்ப்புக்கு மீறி வசூல் சாதனை - கமல் மகிழ்ச்சி!

கம‌ல் தயா‌ரி‌த்து, இய‌க்‌கி, நடி‌த்து‌ள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வரும் வெள்ளிக்கிழமை (7-ஆம் தேதி) வெளியாகும் என்று தெரிகிறது.

144 தடை உத்தரவு பெற்ற முதல் தமிழ்படம்

தமிழக வரலாற்றில் சமீபகாலத்தில் ஒட்டுமொத்தமாக அத்தனை மாவட்டங்களிலும் ஒரு சினிமாப் படத்துக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்த்கது.


2-ஆம் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்
விஸ்வரூபம் 5-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.10 கோடிகள்
விஸ்வரூபம் 6-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.65 கோடிகள்
விஸ்வரூபம் 7-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.28 கோடிகள்
விஸ்வரூபம் 8-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.05 கோடிகள்
விஸ்வரூபம் 9-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.35 கோடிகள்
விஸ்வரூபம் 10-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.70 கோடிகள்
விஸ்வரூபம் 11-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.10 கோடிகள்

11-ஆம் நாள் வசூல் 85.47 கோடிகள்.

சமீபத்திய எந்த தமிழ்ப் படமும் இங்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் படம் நல்ல வரவேற்ப்பும் வசூலும் ஆகிறது என்கிற தகவல் கமலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு. விரைவில் தமிழ்நாட்டிலும் நிலை வரும் என எதிர்பாக்கலாம்.

தமிழ் நாட்டிலும் வசூல் பெற வாழ்த்துக்கள் கமல் சார்!!!

ஹாட் நியூஸ்

விஸ்வரூபம் படத்தில் 7 காட்சிகளை எடிட் செய்து, அதாவது ஆடியோவை முற்றிலும் நீக்கிவிட கமல்ஹாசன் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் இந்தப் பணியை இந்தியாவில் செய்ய முடியாதாம், அமெரிக்காவில்தான் செய்ய முடியுமாம்.

விஸ்வரூபம் முற்றிலும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும், அதி நவீன ஆடியோ முறையிலும் உருவாகியிருப்பதால் அதன் எடிட்டிங் வேலைகளை அமெரிக்க லேபில் மட்டுமே செய்ய முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

நீக்கப்படும் காட்சிகள் :

1. படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது வரும் குர்ஆன் வசனங்கள் நீக்கப்படும்.
2. குர்ஆன் வசனத்தின் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.
3. அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுக்க கமல் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை காட்சிகளும் நீக்கப்படும்.
4. முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலைமறைவாக இருந்தார் என்ற வசனமும் நீக்கப்படும்.
5. ‘முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை‘ என்று நாசர் பேசும் வசனம் உட்பட ஏழு காட்சிகள் நீக்கப்படுகிறது.

இந்த வேலைகள் எல்லாம் முடிய சில நாட்கள் ஆகும் என்பதால் படம் வெள்ளிக்கிழமை (தமிழ் நாடு ) திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & dinakaran news paper



விஸ்வரூபம் - வாசகர் கருத்து!

கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படத்தை, தியேட்டர்களில் திரையிட மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவிற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இந்த செய்தி தொடர்பாக வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒரு சில உங்களுக்காக......


போச்சே 40ம் போச்சே. கனவெல்லாம் அம்போன்னு போச்சே. யாரோட கண்ணு பட்டுதோ தெரியல்லே, அத்தனையும் இப்படி ஒரே அடியில் அழிச்சிட்டாங்களே!
- Guru - Chennai, இந்தியா

அய்யா, நானும் கூட கமல் மீதுதான் தப்பு இருக்குமோ என்று நினைத்து இருந்தேன்.ஆனால்,ஜெயா டி வி யில் இந்த செய்தியை பற்றி ஒரு வரி சொல்லாததன் மூலம் ஜெயா அரசுதான் தடையில் தீவிரம் காட்டியுள்ளது என்பதை எங்கள் அப்பன் குதுறுக்கில் இல்ல என்பது போல காட்டி கொடுத்து விட்டது. அம்மாவின் ஆணவம் அவரையே அழித்துக்க்கொள்வார் என்பதை பத்திரிக்கைகள் உணர்த்தி கொண்டு இருப்பது உண்மையாகிவிடுமா என்பது கவலையாக உள்ளது. Best wishes kamal. முஸ்லிம் அன்பர்,எங்களைவிட அரசு தீவிரம் காட்டி வருகின்றது. அரசு வழி எங்கள் வ்ழி என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இதன் மூலம்,அவர்கள் சங்கம் எதுவும் தனியாக முடிவு எடுக்கவில்லை. ஜெயா உங்களுக்கு இது தேவைதானா? ஆனால், வடிவேலுப்ப்போல, முஸ்லிம தீவிரவாதியாகவும்,இந்து கடவுளையும்,அய்யர் பெண் சிக்கன் சாப்பிடுவதாகவும் காட்டுவது சீண்ண்டுவதாக இருப்பதால் கொஞ்சம் எதிர்ப்பை காட்டி, அடுத்த முறை இதுபோல பண்ணாதிங்கோ.
- Venkat Iyer - Nagai, India

எவனென்று நினைத்தாய்? எதைக்கண்டு சிரித்தாய்? விதை ஒன்று முளைக்கையில், வெளிப்படும் சுய ரூபம், யாரென்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன், ஞாபகம் வருகிறதா?
- Rakshith Kp - tiruvannamalai, இந்தியா

பச்சையம்மாவின் சாயம் வெளுத்துப்போச்சு
- IndianTamil - Stamford, யூ.எஸ்.ஏ

ஜெயா அரசாங்கம் இதுபோன்ற தேவையற்ற விசயங்களில் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு தலையாய பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும்..சென்சார் போர்டு அனுமதி வழங்கியபின் மாநில அரசாங்கம் ஏன் தடை விதிக்கவேண்டும்...இது தனி நபரை பழிவாங்குதல் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது...மறவன்.
- Maravan - dublin, அயர்லாந்து

கமல் vs J- winner KAMAL
- MOHAN - Erode, இந்தியா


என்னுடைய இஸ்லாமிய நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட கருத்து. "இஸ்லாம் என்பது ஒரு உயர்ந்த மார்க்கம். ஒரு படத்தை எடுப்பதலோ அல்லது சிலர் அறியாமல் கூறும் கருத்துக்களாலோ இஸ்லாத்தை சிறுமை படுத்திவிடமுடியது". சிலர் அரசியல் காரணங்களுக்காக சிறு சிறு பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களை தூண்டிவிட்டு லாபம் அடைகின்றனர். அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களை ஒரு ஒட்டு வங்கியாக மட்டுமே பாவிகின்றனர். இது உண்மையாகவே தோன்றுகிறது. முஸ்லிம் சகோதரர்களே சிந்தியுங்கள். கண்டிப்பாக யாரோ சிலர் கூறும் கருத்துகளால் உங்களுடைய மதம் சிறுமை அடையாது. அதே சமயம் உங்களுடைய நடவடிக்கையால் மட்டுமே அது எவ்வளவு உயர்ந்த மார்க்கம் என்று நிருபிக்கமுடியும்.
- Ha Ha Ha Siripu Varuthu - Coimbatore, இந்தியா

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். எதை நீ எடுத்தாயோ அது தாத்தா பணத்திலே எடுக்கப்பட்டது ...எதை DTH க்கு கொடுத்தாயோ அதுவும் அவருக்கே கொடுக்கப்பட்டது. எதற்காக கமலஹாசா அழுகிறாய்.
- Panchu Mani - Chennai, இந்தியா

தர்மம் ஜெயிக்கும் .All the best Kamal sir
- Divya Prem - Cambridge, யுனைடெட் கிங்டம்

ஜெயாவின் சிறுபான்மையினரின்...காவலாளி....என்ற வேஷம் களைந்து.... சுயநல...பழிவாங்கும் போக்கு... வெளிபட்டிருக்கிறது.... அதற்க்கு.. அதை வெளிக்காட்ட உதவிய..திரு கமலுக்கு நன்றி.... இனி...திரை அரங்குகளில் திருவிழா கூட்டம்தான்... இதுதான்.. ஜெயா அரசின்... ஆரம்ப சங்கு......... விஸ்வரூபத்தின் எழுச்சி ஜெயாவின் அரசியல் வாழ்வின் வீழ்ச்சியாக இருக்கும்....
-முருகவேல் சண்முகம்.. - சென்னை, இந்தியா

படத்தை மக்கள் பார்க்கவிடாமல் தடுக்க நினைத்த சில தீய சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டி உள்ளது நீதிமன்றம். படத்தை விளம்பரம் செய்ததற்கு நன்றி, படம் கண்டிப்பாக வெற்றிபெரும்.
- RAJA - Chennai, இந்தியா

நேற்று இரவு விஸ்வரூபம் படம் பார்த்தேன். ப்ரில்லியன்ட். ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல இருந்தது. அப்பாவி டான்சர் கமல் கைகளை அவிழ்த்து விட்டவுடன் வில்லன்களை துவம்சம் செய்வார் பாருங்கள், என்னை அறியாமல் கை தட்டி விட்டேன். இந்த ஒரு சண்டை காட்சிக்க்காகவே படம் பார்க்கலாம். குறிப்பா ஆப்கானிஸ்தான் மலை குகைகளில் படம் காட்சி செய்யப்பட்ட விதம் ஹாலிவுட் படத்திற்கு நிகர். நீங்கள் கமலுக்கு உண்மையில் சப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தியேட்டர் போய் இந்த பார்த்து, இந்த படத்தை 2013-ன் blockbuster படம் ஆக்குங்கள் - அதனால் படம் முடியும் போது டைட்டில் போடுவது போல் விஸ்வரூபம்-2 படம் விரைவில் கமல் எடுப்பார்.
- Amalraj Gnanasigamani - Sydney, ஆஸ்திரேலியா


ஜெயா மூக்கு அறுப்பு. lol . உண்மை என்றும் ஜெயிக்கும். ஒரு கலைஞனின் சாபம் உங்களை சும்மா விடாது. தியேட்டர் owner எல்லாம் எத்தனை கமல் படம் காட்டி பணம் சம்பாரிசிருபிங்க. ஒரு புது முறையை அவர் அறிமுக படுத்தினால் பொறுக்கவில்லை. முஸ்லிம்களை துண்டி விட்டு தடை செய்கிறீர்கள். பேசாமல் கமல் hollywood ல மட்டும் நடிச்சிட்டு இருக்கலாம். இவங்களுக்கு பவர் ஸ்டாரும், ஆர்யாவும் தான் சரி.
- Aravind Kumar - Chennai, இந்தியா

கமல் சமீபத்தில் ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற நிகழ்ச்சியில் ப.சி அவர்களை பிரதமராக பார்க்க ஆசைப்படுவதாக பேசி இருந்தார். இது நம்ம அம்மையாருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த பழிவாங்கல். அம்மையாரு வோட்டு வங்கி அல்லது சட்டம் ஒழுங்கு பற்றி பயபடுபவறல்ல.
- Easwara Dhooran - Erode, யூ.எஸ்.ஏ

இந்த விசயத்தில் கமலின் நிலைப்பாட்டைப் பாராட்டியே தீர வேண்டும். மனோதிடத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். கலை மகளின், கலைப் பொக்கிசம் என்று சொல்லி தலையில் தூக்கிக் கொண்டாடும் சினிமா உலகம் கூட இவர் காலைவாரிவிட்டது. ஆனால் அதற்கெல்லாம் சற்றும் கலங்காமல் தனித்து நின்று போராடும் உம்மை ரசித்ததற்கு இப்போது பெருமைப்படுகிறேன் - ரசிகன் என்ற முறையில். கவலைப் படாதீர்கள் கமல், எது நடந்தாலும் நாங்கள், உங்கள் ரசிகர்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.
- Vinoth Kumar - Chennai, இந்தியா

விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் என்றால் சமூக சீர்கேட்டை உருவாக்கும் பாடல்கள் , படங்களை அரசு தடை செய்ய வேண்டும் "கட்டிபிடி ..கட்டிபிடிடா ..கண்ணாளா ..கண்டபடி கட்டிபிடா " , கந்தா ..கார வடை ...இந்த பாடலில் பீர் சோறு மாதிரி எப்ப எப்ப அடிக்க வேண்டும் என்கிறார்கள் அதை தடை செய்யலை . பாலியல் கொடுமைகளை தூண்டும் படங்களை இன்னும் போஸ்டரில் திரை அரங்குகளில் ஓடிகொண்டிருகின்றது . உரிமைக்குரல் படத்தில் "பொண்ணா பொறந்தா ஆம்பளை கிட்ட கழுத்தை நீட்டிகனும் ..இந்த பாடலில் காயா இல்லை பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா " என்ற வரிகள் வரும் இதெல்லாம் தாண்டி வந்தவர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள் , அதில் இந்த படம் வந்தபோது ஸ்கூல் பசங்களை வம்பாக பார்கவைதது காசும் பார்த்த கதையும் உண்டு . தண்ணிக்கு வழியை காணோம் , இதில் மத்திய தணிக்கை குழு அளித்த சான்றிதழ் சரியில்லையாம் , இதில் எதுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் , படம் பார்த்தவன் பிடித்தால் பார்பான் இல்லாவிட்டால் எந்த ஸ்டார் நடித்தாலும் திரும்பி பார்க்கமாட்டான் , 144 தடை எதுக்கு , அப்ப தமிழன் யாருக்கும் கருத்து சுதந்திரம் இல்லை , பேச்சுரிமை இல்லை ...ஜனநாயக நாட்டில் இது வெட்க கேடு , ஆப்கானிஸ் தான் தீவிரவாதிக்கும் இங்குள்ள முஸ்லிம் நண்பர்களுக்கும் தொடர்பா இருக்கு ?, நம்ம ஊரில் இந்த அமைப்புகள் சிந்திக்க வேண்டும் , தீவிர வாதி வைத்தியலிங்க ஐயர் ன்னு ஆப்கானிஸ் தானில் வைக்க முடியுமா ? ..இந்தியர்கள் நாம் நம்மில் ஒருவன் படைப்பு அமெரிக்காவில் பேசபடுகின்றது, 100 கோடி நாங்களும் செலவு பண்ணுவோம் சினிமாவிற்கு தைரியம் வந்திருகின்றது ஒரு கலைகனுக்கு அதை பாராட்டாமல் நாம் எதிர்ப்பது மிக தப்பு
- Navasathishkumar - Madurai, இந்தியா

நீதிபதி அவர்கள் தீர்ப்பை 8 மணியிலிருந்து 10 மணிக்கு மாற்றி இருப்பதன் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது. தீர்ப்பு அரசுக்கு எதிராக வரும். பாதுகப்பு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்கு சென்று சேரும் வரை தீர்ப்பை இழுத்தடிக்கிறார்கள். கமல் சார் கண்டிப்பாக உங்களுக்கு தான் வெற்றி. விஸ்வரூபம் சென்னையில் மிக விரைவில்.
- Veera - Paris, பிரான்ஸ்

கமல் என்ற ஒரு தனி மனிதனை பழி வாங்க அரசாங்க இயந்திரத்தை உபயோகப்படுத்துவது நியாயமாகாது. சில்லறைத்தனமாக நடந்துகொள்ளும் இவரெல்லாம் பிரதமரானால் (பேச்சுக்குத்தான்) இந்தியாவின் கதி அதோ கதிதான்.
- Baskaran Kasimani - singapore, சிங்கப்பூர்

படத்தை ஓசியில் பார்த்த பின்னரும் இன்னும் வாதம் நடக்கிறது. உலக நாயகனுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் சாதாரன சாமான்ய மக்களின் நிலைமை என்ன? மேலிருந்து ஒரு நீதியரசர் பார்த்துகொண்டு இருக்கிறார். அவரது தீர்ப்புக்கு ஒருநாள் இந்த குள்ளநரிகள் பதில் கூறவேண்டும். உலகநாயகனின் பக்கம் கடவுள் உள்ளார்.
-sadaiappan - Abu dhabi, ஐக்கிய அரபு நாடுகள்

தமிழ்நாடு அரசு வக்கீல் சொல்வதை பார்த்தால் ஒரு தாயும் தந்தையும் தங்கள் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அவள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லுவதை போலுள்ளது . அரசு வக்கீல் படித்துதான் இந்த வேலைக்கு வந்தாரா என்பது சந்தேகமாக் உள்ளது . இப்படி அரசியல் முதலீடுக்காக ஒரு கலைஞனை குருதிபடுத்துவது சரியல்ல .அரசியல்வாதிகள் நம் நாட்டையே விற்று விட்டு மீண்டும் அதே நாட்டை ஆள இந்த சட்டம் இல்லையா.
- Mohan - Kochi, இந்தியா


பிரச்னை பெரியதாய் ஆனதற்கு ஜெயா tv தான் காரணமாமே ?? டிவி rights ஜெயா டிவி இருந்து ஸ்டார் விஜய்க்கு மாறியது, மற்றும் கமல் ஒரு விழாவில் சிதபரம் தான் பிரதமர் அக வேண்டும் என்று கூறியது தான் காரணமுன்னு சொல்றாங்க அப்படியா ? மெய்யாலுமா??
- Kathiravan.M - namakkal, இந்தியா

சென்ற தேர்தலுக்கு முந்தைய பொது தேர்தலில் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய 100 கோடி தர முன்வந்தார்கள், அதனை அப்போது கமல் மறுத்தார் என்பதற்காகவே இப்போது அதே 100 கோடி இழப்பை அவருக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வளவு வெளிப்படையாக ஒருவரை பழிவாங்க அம்மாவால் மட்டுமே முடியும். பேசாமல் ஜெயா டிவிக்கு தொலைக்காட்சி உரிமத்தை வழங்கி விட்டால் அடுத்த கணமே படத்தை சிக்கலில்லாமல் வெளியிட்டு விடலாம். பாவம் கமல், பிழைக்கத்தெரியாத மனிதர்.
- Ba Maha - Hougang new town, சிங்கப்பூர்

அட பன்னாடைகளா... மக்கள் வரிபணத்தை திருடுபவர்களை விட்டு விட்டு தன் தொழிலை, தனக்கு தெரிந்த தொழிலை செய்தவனுக்கு தடை. என்னடா நாடு இது. அப்போ அமெரிக்கனை பாத்தால் இந்த பூமிய விட்டே ஒதுகிடுவிரோ என்னடா முட்டாள் தனமா இருக்கு
- Wilsonsam Sp - Bobigny, பிரான்ஸ்

என்னாங்க நடக்குது...ஒண்ணுமே புரியலையே..மொதல்ல புண்படுத்துதுன்னாங்க. அப்புறம் சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னாங்க..அப்புறம் சென்சார் போர்டே சர்டிபிகாடே குடுக்கல அது டுபாக்கூர் சர்டிபிகேட் ன்னாங்க..இப்போ கமல் வித்துபுட்டார்,ஆகவே அவருக்கு வழக்கு போட உரிமையில்லை ங்கிறாங்க.. மத்திய அரசு 31 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா என்பதை உறுதி படுத்தி ஆவன செய்ய வேண்டும்..அப்படி கெட்டு இருந்தால் உடன் கவர்னரை அறிக்கை தர கேட்க வேண்டும்..அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- K.Sugavanam - Salem, Tamilnadu, இந்தியா

படத்தை விற்று விட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை.... வாஸ்தவமான வாதம் தான்... ஆனால் நாட்டையே விற்று விட்ட அரசியல்வாதிகளுக்கு ஒட்டு கேட்க மட்டும் உரிமை இருக்கிறதாக்கும் ? ??
-JAY JAY - Chennai, இந்தியா
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Dinamalar.com





விஸ்வரூபம் வசூல் மழை !

விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் படத்தை வெளியிட தமிழக அரசு 2 வாரத் தடை விதித்துள்ளது. ஆனால் விஸ்வரூபம் கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள்.

நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில் தொடர்ந்து மக்கள் கூடுகின்றனர்.


முதல் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்

முதல் நான்கு நாள் வசூல் 32.24 கோடிகள்.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு.


இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை இல்லாமல் இருந்திருந்தால்கூட, பெரும் நஷ்டத்திலிருந்து கமல் தப்பித்துவிட்டிருப்பார் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது.

தடை நீங்குமா ?

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 11.45க்கு விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் என மாலை 6 மணி வரை விசாரணை நீடித்தது.

பின்னர் நீதிபதி, இன்று இரவு 8.30க்கு தீர்ப்பு அளிப்பதாகக் கூறினார்.

நீதிமன்றம் வழங்கவிருக்கும் இந்தத் தீர்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது, நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & www.muruganandam.in



Related Posts with Thumbnails
 
back to top