Showing posts with label சுண்டல். Show all posts
Showing posts with label சுண்டல். Show all posts

வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு கார வகை. மாலை நேர டீ டைம் ஸ்நாக்காக கொரிக்க ஏற்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி வேளைகளில் தயாரிப்பதற்கு ஏற்ற சுண்டல் இது.

சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் வேர்க்கடலை கார சுண்டல் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

வேர்க்கடலை – 3 கப்
வெங்காயம் – பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 தேவையான அளவு

கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • கடலையை நன்றாக அலசிக் கொள்ளவும். கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரும்வரை வேக விடவும்.

  • மிருதுவாக வெந்த வேர்க்கடலையை தண்ணீர் இன்றி வடிகட்டவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியபின் அதனுடன் வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு,தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டவும். சுவையான வேர்க்கடலை கார சுண்டல் தயார்.

  • தேவைட்டால் மல்லித்தழை தூவி அலங்கரித்து கொள்ளலாம். பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாயையும் பயன்படுத்தலாம்.

  • ருசியான வேர்க்கடலை கார சுண்டல் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கொண்டைக்கடலை சுண்டல்

நமது கோவில்களில் அல்லது வீடுகளில் பூஜை நாட்களில் செய்யப்படும் ஒரு 'சாட்' வகை இந்த 'கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதம்'. அதனை மிக அதிக சுவையுடன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


தேவையானப் பொருள்கள்:
வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 8
காய்ந்த மிளகாய் - 1

இஞ்சி – சிறுதுண்டு
தேங்காய் – 1

கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

  • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.

  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.

  • கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

  • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.

  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.
நல்ல கார சாரமா உப்பு மிளகாய் சேர்த்து சாப்பிடு பாருங்க ...அட அட.. என்ன ருசி !

குறிப்பு :-
இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top