Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

ஜில்லுனு ஒரு பொங்கல் வாழ்த்துக்கள்!

தமிழ்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!

நம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை கொண்டாடுகிறோம்.

அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... அனைவரது வாழ்விலும் சந்தோசங்கள் பொங்கட்டும்...!
நல்லவன் - கெட்டவன்
முடிந்தவன் - முடியாதவன்
இருப்பவன் - இல்லாதவன்
மேலோன் - கீழோன்
என எந்த வேறுபாடும் பார்க்காமல்
எல்லோருக்கும் ஒன்றாய்
மிகவும் நன்றாய்
அனைவரும் மகிழ்ச்சியாய்
கூடிக் கொண்டாட
இனிதே பொங்கு
பொங்கலோ பொங்கல் என்று.
பொங்கலோ பொங்கல்...!
உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது.

வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர்.அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும்.

மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.


தமிழகத்தில் பல பகுதிகளில் கணு என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிராமணர் வீடுகளில் கணு கொண்டாடப்படும்.

முதல் நாள் செய்த பொங்கலுடன், சாதத்தில் குங்குமம், மஞ்சள் போன்றவை சேர்க்கப்பட்டு பல வண்ணங்களில் சாதம் செய்யப்பட்டு அவை பறவைகளுக்குபடைக்கப்படும்.

பெண்கள், தங்களது சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அரிசி, பருப்பு,பணம் ஆகியவற்றை பொங்கல் சீராக கொடுப்பதும் நடந்து வருகிறது. அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் தங்கள் சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு சீராக நிலத்தில் விளைந்த அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப கிர்ந்து கொண்டார்கள். இப்போதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.


இனிய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Happy New Year 2011

அன்பு வாசகர்களுக்கு, கோழிபையனின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !!

Dear visitors!

New year is an wonderful occasion, when we welcome a brand new year 2011 and say goodbye to year 2010. At this moment I only wanna say: Happy New Year everyone, wish you have more success and happier in 2011.

- Kolipaiyan



சகோதரிகளுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

இன்று மார்ச் 8ம் நாள் சர்வதேச 100வது பெண்கள் தினம்.

என் உடன்விறவா சகோதரிகளுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம் - பெண்!
விலையற்ற செல்வம் - பெண்! ....
கருப்பு வைரம் நம்ப வைரமுத்து அவர்கள் தன் அன்னையை பற்றி எழுதிய ஒரு கவிதை + கண்ணொளி உங்களுக்காக...





புத்தாண்டு வாழ்த்துக்கள்

வருகைதரும் புத்தாண்டே
வளமையுடன் தோன்று - உன்
வரவினில் எம் நம்பிக்கை
விழுதுகளை ஊன்று!
இருகரங்கள் நீட்டியுனை
வரவேற்றோம் ...



எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்



தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

தீபாவளி கொண்டாலாமா வேண்டாமா-னு பட்டிமன்றம் நடக்கும் மானிடகர்கள் மத்தியில் மனிதர்களாக, உறவுகளுடன் ஒரு நாள்...

சந்திப்பு
புது உடை
இனிப்புகள்
கொண்டாட்டம்
விருந்து
கேளிக்கை
ஆட்டம் பாட்டம்
என் மகிழ்ந்து சந்தோசமாக இருப்போம் இன்று போல் என்றும்.

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!!!


வாழ்த்துகளுடன்,
கோழிபையன்


Related Posts with Thumbnails
 
back to top