காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ?

காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு சான்விட் தான் மிகவும் சிறந்தது. அதனால் இன்று நாம் பார்க்க இருப்பது காளான் பிரட் சான்விட்ச்.

அதற்கு முன், பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.


சரி.. சரி இனி காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

காளான் - 200 கிராம்,
கோதுமை பிரட் - 4,

வெங்காயம் - 2,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிதளவு,

மசாலாத் தூள் - கால் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - சிறிதளவு,

கொத்துமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணைய் - 100 கிராம்.

செய்முறை:-

  • காளான்களைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.

  • வாணலியில் வெண்ணைய் போட்டு, லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய்,மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

  • கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும்.


  • இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும்.

  • சுவையான, சத்தான காளான் சான்விட்ச் ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



வணக்கம் சென்னை (2013) - பாடல் விமர்சனம்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் "எங்கடி பொறந்த..." என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.

1. ஹே... நேரம் மாறலாம் காலம் மாறலாம்
பாடியவர்கள் : பாபோன் & மரியா ரோ வின்சென்ட்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு ஸ்லொ மெலடி பாடல். கிடார், சாக்ஸ், வயலின் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாடல். பாடல் ஈசியா ஹம் பண்ணும்படி இருக்கு. பாடல் வரிகள் ஆங்காங்கே தூவி நிரப்பியிருக்கிறார் நா.முத்துக்குமார்.


2. ஒசாகா ஒசாகா
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு காதல் பீட் பாடல். பாடல் அமைப்பு A.R.ரகுமான் பாடலை நினைவுபடுத்துகிறது. தேங்கா நாராக நெஞ்ச உரிசாலே... உள்ளா என்னான்னு காட்டிப்புட்டா .. நல்ல கவிதை வரிகள். என் பேவரிட் பாடல்.


3. ஓ பெண்ணே பெண்ணே
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு மென்மையான மெலடி பாடல். பாடல் முழுக்க பியானோ இசை...


4. எங்கடி பொறந்த
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடலை எழுதியவர் : விக்னேஷ் சிவன்.

இது ஒரு சிம்பிள் பீட் பாடல். ரஜினி பாஷா ஸ்பீச் மியூசிக், எங்கடி... எங்கடி.... எல்லாம் மிக மிக கலக்கல். மீண்டும் ஒரு பேவரிட் பாடல் இந்த ஆல்பத்தில்...


5. ஐலசா ஐலசா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு பியுட்டிபுள் மெலடி பாடல். இந்த பாடலில் பியானோ, நாதஸ்வரம் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பாடல். சுசித்ரா வாய்ஸ் மிக அழகாக பொருந்தி இருக்கு.


6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
பாடலை எழுதியவர் : அர்ஜுன்
இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். அனிருத்தின் டிரேட்மார்க் பாடல். ஓக்கே ரகம்.


7. சென்னை சிட்டி
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
பாடலை எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழன் ஆதி & ஹர்த் கவுர்

இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். நான் ஒருதடவ .சொன்ன .... இந்த வரிகளை பயன்படுத்தியவிதம் மிக மிக அருமை. இது தாண்டா சென்னை கெத்து ... வரிகள் அருமை!! கோழி சவுண்ட் அங்காங்கே அருமை!!!

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் வணக்கம் சென்னை ரசிக்கும்படி இருக்கு!


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பட்டத்து யானை (2013) - விமர்சனம்

மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை. இதில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா.

இவர்களுடன் சந்தானம், ஜெகன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மவுலி, அழகம் பெருமாள், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

மும்பையை சேர்ந்த முரளி ஷர்மா, ரோஹித் முன்னா, ஐதராபாத்தை சேர்ந்த அஜய் சேனா, தடையற தாக்க மகா காந்தி, ஜான் விஜய் ஆகிய 5 பேரும் வில்லன்களாக நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னனா ...

காரைக்குடியில் சமையல்காரராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்கிறார் விஷால் & Co. ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் காரைக்குடியை காலி பண்ணிட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் கோஷ்டி.

திருச்சிக்கு போன இடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் விஷால் மனதில் காதலை விதைக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வில்லன் ஒருவன் முயற்சிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவை அந்த பிரச்சினையில் இருந்து விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ஹீரோ விஷால்
எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று விஷால் சமீபகாலமாக தீயா வேலைசெய்கிறார். ஆனால், காலம் அவரை ஏமாற்றியே வருகிறது. விஷாலுக்கு அதே நடிப்புதான். இடைவேளை பிளாக்கில் தான் யார் என்பதை சீரியஸாக சொல்லும்போதுதான் விஷால் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் போலும்.

விஷால் சண்டைக்காசிகளில் சக்கைபோடு போட்டாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் அது எதுவுமே பெரிய அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை. சண்டை காட்சிகளை அமைத்தவரின் புண்ணியத்தில் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்து தப்பித்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் விஷாலும் ஒருவர் என்பதால் ஆக்சனில் காது கிழிகிறது..! மனிதர் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் நூறு, இருநூறு அடியாட்களை அடித்து போடுவது நம்பும்படியாக இருப்பது படத்திற்கு பெரும் ப்ளஸ்!

விஷாலைப் பொறுத்தவரை கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்தில் விஜய்யின் சாயல் தெரிகிறது. சந்தானத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் விஷாலுக்கு கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஹீரோயின் ஐஷ்வர்யா
ஐஷ்வர்யா அர்ஜூன் சும்மா வந்து போகிறார். + 2 படிக்கும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். படம் முடியும்வரை விஷாலிடம் காதலை சொல்லாமலே போகிறார். பாடல் காட்சிகளில் ஜிகினா டிரெஸ்ஸில் ஜொலித்தாலும், கனவுக்கன்னியாக வரும் வாய்ப்பு குறைவுதான்..!

சந்தானம்
சந்தானம் தான் நிஜ ஹீரோ. படம் பூரா இவர் ராஜ்ஜியம் தான். ஆனா சிரிப்பு கம்மியாதான் வருது. பழைய படங்களின் ஸ்டைலையே இதிலும் தொடர்ந்திருந்தாலும் சிற்சில இடங்களில் நகைக்க வைத்திருக்கிறார். ஓட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சென்று சீரழியும் இவரின் நகைச்சுவை கலாட்டா தியேட்டரில் விசில் பறக்கவைக்கிறது. மொத்ததில் சந்தானம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து!

மயில்சாமி
மயில்சாமி சின்ன கேரக்டரா இருந்தாலும் மனசுல நிக்கிற மாதிரி நல்ல கேரக்டர். கானா பாலாவின் குரலில் அவர் பாடும் பாட்டு அசத்தல். அவர் போட்ட டான்ஸும் கலக்கல். மனிதர் டயலாக் டெலிவரியில் பின்னியெடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் சித்ரா லஷ்மணனிடம் தான் எப்படி திருடினேன் என்பதைச் சொல்லும் காட்சியில் சந்தானத்தை ஓவர்டேக் செய்திருக்கிறார்

இசை தமன்
தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலாவின் பாடல் & 'என்ன ஒரு என்ன ஒரு...' மட்டும் ரசிக்கும்படி இருந்தாலும் அதற்கான நடன அமைப்பு அலுத்துப்போன ஒன்று. 'என்ன ஒரு என்ன ஒரு..' பாடல் டியூனை கேட்டால் வேறு எங்கோ போய் இடிக்குது.. கண்டுபிடிச்சிருவோம்.. மண்டைக்குள்ளேயே இருக்கு.. ( சிவாஜி நடித்த எங்கள் தங்க ராஜா படத்தில் வரும் இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை என்ற பாடலின் அப்பட்டமான காப்பி.)

ஜான் விஜய்
கொஞ்சம் வில்லத்தனம் நிரம்பிய குணசித்திர வேடத்தில் ஜான் விஜய் மட்டும் சோபிக்கிறார். ஆனால் விஷாலிடம் ஓர் உதை கூட வாங்காமல் எல்லாக் காட்சிகளிலும் எப்படியோ நழுவி விடுகிறார். ஜான் விஜய் மற்றும் அவரது கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.

சண்டைக்காட்சி ஆன்டனி
சண்டைக்காட்சிகளில் ஆன்டனி செமயாக எடிட்டிங் செய்திருக்கிறார். தேவைப்படும் இடங்களில் மட்டும் ஸ்லோ மோஷன் வைத்து சண்டைக் காட்சிகளில் சீட் நுனிக்கே வர வைக்கிறார் ஆன்டனி.

இயக்குனர் பூபதி பாண்டியன்
முக்கியமான வில்லனாக வரும் அண்ணாச்சியும் செம பெர்பாமன்ஸ். ஓரிரு காட்சியில் வரும் நெல்லைசிவா, திருடுறவன் எல்லாம் ஜென்டில்மேன்தான் என்று சொல்வதற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இது போன்று கலகலக்க வைக்கும் வசனங்கள் படம் முழுவதும் தொடர்ந்து வந்து சிரிக்க வைக்கின்றன. வைத்தியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கிய விதம் அருமை.

வசனங்களில் சில படம் முடிந்த பின்னரும் நினைவில் இருக்கின்றன. கதை என்று பார்த்தால் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள். காமெடி பாதி, ஆக்சன் மீதி என்று கொடுக்க முயன்று ஏதோ ஒன்றை திரையில் காட்டி இருக்கிறார்கள். முதல் பாதியில் காமெடியும், இரண்டாம் பாதியில் பாசம், காதல், சண்டை என கலந்து கொடுத்திருக்கிறார்.

கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. விஷால் ரசிகர்களும், காமெடிப் பிரியர்களும் வேண்டுமானால் பார்க்கலாம்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
பட்டத்து யானை - படம் அவ்வளவு சிறப்பு இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top