சமையல் குறிப்பு : முருங்கைகீரை கஞ்சி

இரும்பு சத்து நிறைந்த முருங்கைகீரை + புரத சத்து நிறைந்த பச்சைப் பயிரை + வாயுவை நீக்கும் சுக்கை கொண்டு மிகவும் வித்தியாசமான முருங்கைகீரை கஞ்சி செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :

பச்சரிசி நொய் - 1 கப்
பச்சைப் பயிறு (முழுப் பயிறு) - 1 கப்
முருங்கைக்கீரை - தேவையான அளவு
சுக்கு - 1 துண்டு
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
  1. பச்சைப் பயிரை அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கவும்.
  2. கழுவி சுத்தம் செய்யப்பட்ட அரிசியை எட்டுக் கப் தண்ணீரில் நன்கு வேகவையுங்கள்.
  3. இதனுடன் ஊறவைத்த பச்சை பயிரையும் சேர்த்து வேகவையுங்கள்.
  4. சுக்கை நன்கு அரைத்து / பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. அரிசி நன்கு வெந்தப்பின் முருங்கைகீரை + உப்பு + சுக்கை சேருங்கள்.
  6. பச்சைப் பயிறு நன்கு வெடித்து மலரும் வரை வேகவிடுங்கள் + அரிசியும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து பின்பு இறக்குங்கள்.

குறிப்பு :-
பச்சரிசி பயன் படுத்தாதவர்கள் புழுங்கலரிசி பயன்படுத்துகள். வாரத்திற்கு ஒரு நாள் இதனை செய்து சாப்பிடலாம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



3 comments:

Kolipaiyan said...

நன்றி தமிழன்.

Jayadev Das said...

குக்கர்ல பன்னனுனா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு வேக வச்சிடனுமா, இல்ல எப்படி?

Kolipaiyan said...

Yes. you are correct. Do the same, Jayadeva.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top